பதிவு செய்த நாள்
27 ஏப்2017
15:54
புதுடில்லி : மாருதி சுசுகி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகரலாபம் 15.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் இறுதி காலாண்டு நிகர லாபம் ரூ.1715 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பை மீறி நிகர லாபம் ரூ.1790 கோடியாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு, பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது, விலை குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்நிறுவனத்தின் லாபம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனையை பொறுத்தவரை இந்நிறுவனத்தின் லாபம் 20.3 சதவீதம் அதிகரித்து ரூ.18,005 கோடியாக உள்ளது. கடைசி காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த கால அளவில் 414439 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈவுத்தொகை 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|