பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:20
புதுடில்லி : மொபைல் போன் சேவையில், புதிதாக களமிறங்கும் நிறுவனங்களுக்கென, விதிமுறைகளை உருவாக்க, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தொலை தொடர்பு துறையினருடன், அடுத்த மாதம், ஆலோசனை செய்ய, டிராய் திட்டமிட்டு உள்ளது. கடந்த ஆண்டு, செப்., 5ல், ரிலையன்ஸ் நிறுவனம், ‘ஆர்ஜியோ’ பிராண்டின் கீழ், மொபைல் போன் சேவையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியது. டிச., வரை இலவச சேவை எனக்கூறிய இந்நிறுவனம், பின், புத்தாண்டு சலுகை என்ற பெயரில், மார்ச் வரை நீட்டித்தது.
இதற்கு, ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சோதனை அடிப்படையிலான சேவை, இலவச சேவை என, ஆர்ஜியோ, விதிகளை மீறி சந்தாதாரர்களை இழுப்பதாக குற்றஞ்சாட்டின. இதையடுத்து, புதிதாக களமிறங்கும் மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகளை உருவாக்க, டிராய் முடிவு செய்து உள்ளது. அதில், ஒரு நிறுவனம், சோதனை அடிப்படையில் வழங்கும் மொபைல் போன் சேவை, இலவச மொபைல் போன் சேவைக்கான கால வரம்பு உள்ளிட்ட, முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|