பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:56
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும், ‘எச் – 1பி’ விசா விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளார்.இதனால், மிக உயர்ந்த ஊதியத்தில், அதிக திறன் தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு மட்டுமே, இந்த விசா மூலம், வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு, ‘எச் – 1பி’ விசா மூலம் செல்லும், இந்திய ஐ.டி., வல்லுனர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். அவர்கள், ஆண்டுக்கு, சராசரியாக, 1 லட்சம் டாலர் ஊதியம் பெறுவர்.அதேசமயம், இந்த விசா மூலம், வெளிநாடுகளில் இருந்து, தொழில்நுட்ப வல்லுனர்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு, கூடுதலாக, 260 கோடி டாலர் செலவாகும்.
அமெரிக்காவில், முதுகலை பட்டம் பயிலும் இந்தியர்கள் மற்றும் ‘எச் – 1பி’ விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியாவின் அதிக திறன் உள்ள ஐ.டி., வல்லுனர்கள் ஆகியோருக்கு, உயர்ந்த ஊதியமும், சிறந்த சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இதை, அமெரிக்காவின் பான்யன் ட்ரீ கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனர் இன்னேஷியஸ் சித்தலன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|