பதிவு செய்த நாள்
30 ஏப்2017
03:44
மும்பை:ஹிமாலயா பேபி கேர் நிறுவனம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதற்கான, பிரத்யேக மையங்களை, நாடு முழுவதும் அமைக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் பொது மேலாளர், என்.வி.சக்கரவர்த்தி கூறியதாவது:நிறுவனம், ‘மம்ஸ் அண்டு பேபிஸ்’ எனும் பிராண்டின் கீழ், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மையத்தை, பெங்களூரில் திறந்துள்ளது. இது போல, நடப்பு நிதியாண்டிற்குள், நாடு முழுவதும், 25 பிரத்யேக சில்லரை விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரே இடத்தில் மிக எளிதாக வாங்கலாம்.
இந்தியாவில், குழந்தை பராமரிப்பு பொருட்கள் துறையில், நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது, பிரத்யேக சில்லரை விற்பனை மையங்களை விரிவுபடுத்துவதன் மூலம், இத்துறையில் மேலும் வலுவாக காலுான்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|