பதிவு செய்த நாள்
01 மே2017
04:17
கச்சா எண்ணெய்
கடந்த இரு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்து, சர்வதேச சந்தையில் வர்த்தகமாகிறது. அதிகப்படியான அமெரிக்க எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவையில் ஏற்பட்ட தொய்வு, ஈரான் நாட்டின் உற்பத்தி பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் விலை இறக்கம் நேரிட்டது.மாதமொருமுறை, இ.ஐ.ஏ., வெளியிடும் ‘பெட்ரோலியம் சப்ளை மன்த்லி’அறிக்கையில் பிப்., மாதத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி, தினசரி 19.00 மில்லியன் பீப்பாய்கள் ஆகும். இது அதற்கு முந்தைய மாதத்தில், தினசரி 9.30 மில்லியன் பீப்பாய்கள் என்றிருந்தது. மேலும், உள்நாட்டு தேவையானது, 4.90 மில்லியன் பீப்பாய்களாக குறைந்தது. இது கடந்த, 2012ம் ஆண்டை விட குறைவாகும்.
கடந்த, 2016 நவம்பரில் ஒபெக் மற்றும் நான் ஒபெக் நாடுகள் உற்பத்தி குறைப்பை தீர்மானித்தன. ஈராக் நாடு தன் உற்பத்தியை குறைக்காமல் அதிகரித்து வருகிறது. இது விலை ஏற்றத்தை தடை செய்கிறது. தற்போது தினமும், 2 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி செய்கிறது. மேலும், 2018ல் 4 லட்சம் பீப்பாய்கள் வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. மார்ச் மாத உற்பத்தி 4.46 மில்லியன் பீப்பாய்களாகும். இந்த ஆண்டு இறுதியில் இதை 5 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்த திட்டம் தீட்டியுள்ளது.வரும் நாட்களில் மந்தமான சூழ்நிலையில் வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 47 டாலர் என்ற நிலை நல்ல ஆதரவாக உள்ளது. அதற்கு கீழ் வர்த்தகமானால், விலை சரிவு தொடர்ந்து 43 டாலர் வரை நிகழ வாய்ப்பு உள்ளது.
பொருள் வணிக சந்தையில் கச்சா எண்ணெயின் இந்த வார அளவுகள் (1 பீப்பாய்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (மே) 3,120 3,075 3,240 3,305
தங்கம் – வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த இரு வாரங்களாக சரிவு நிலையில் காணப்பட்டன. தங்கம், 2.60 விழுக்காடும், வெள்ளி 8.05 விழுக்காடும் குறைந்து வர்த்தகம் ஆகின. தற்போது, சர்வதேச சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் (38.104 கிராம்) 1,268 டாலர், வெள்ளி ஒரு அவுன்ஸ் 17.15 டாலர் என்றளவில் உள்ளது.
கடந்த வெள்ளியன்று வெளிவந்த அமெரிக்க ஜி.டி.பி., விபரம், பொருளாதாரம் பின்னேற்றம் அடைந்ததை சுட்டிக் காட்டியது. காலாண்டு ஜி.டி.பி., 0.7 விழுக்காடு உயர்வுடன் காணப்பட்டது. இது, 2014ம் ஆண்டின் காலாண்டைக் காட்டிலும் தொய்வான நிலையாகும். இந்த சூழ்நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான, ‘பெடரல் ரிசர்வ் வங்கி’ தன் வட்டிவிகிதத்தை உயர்த்தும் முயற்சியை செப்., 2017 வரை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், யு.எஸ்.டி., எனப்படும் அமெரிக்க நாணய கணக்கீடு குறையும். இதன் மூலமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே, தங்கத்தில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு இரு மடங்காக வெள்ளியின் விலை மாறுபடும். இதற்கு வெள்ளியின் உபயோகம், ஆபரணம் மற்றும் சேமிப்பு தேவையைக் காட்டிலும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.கடந்த வாரம் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் அதன் முடிவுகள், புதிதாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளவரின் கொள்கை முடிவுகள் போன்றவை, விலை சரிய காரணமானது. வரும் வெள்ளியன்று வர உள்ள யு.எஸ்.என்.எப்.பி., டேட்டா வெள்ளி விலை போக்கை தீர்மானிக்கும்.
பொருள் வணிக சந்தையில் தங்கம் இந்த வார அளவுகள் (10 கிராம்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (ஜூன்) 28,700 28,550 30,120 30,300
பொருள் வணிக சந்தையில் வெள்ளி இந்த வார அளவுகள் (1 கிலோ)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) (ஜூலை) 39,650 39,180 40,400 41,000
செம்பு
முந்தைய மூன்று வாரங்களில் ஏற்பட்ட விலை சரிவை அடுத்து கடந்த வாரம் செம்பின் விலை சிறிதளவு உயர்ந்தது. இதற்கு காரணம், இ.சி.பி., எனப்படும் ஐரோப்பிய சென்ட்ரல் பேங்க் நிதி கொள்கை குறித்து கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. அதில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் இல்லை என்றும், டிச., வரை குவாண்டிடேடிவ் ஈஸிங் (QE)) தொடரும் என்றும் அறிவித்ததுதான்.கடந்த ஆண்டு முதல் காலாண்டை விடவும், 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதி, 20 விழுக்காடு குறைவாகும்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான, மொத்த இறக்குமதி, 6,99,000 டன்களாகும். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் அறிவித்த புதிய வரி சலுகைகள் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு உபயோகமான செம்பு விலை உயர்ந்துள்ளது.
பொருள் வணிக சந்தையில் செம்பின் இந்த வார அளவுகள் (1 கிலோ)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 368.50 363.00 377.00 385.00
பங்கு வர்த்தகம்
கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் பங்கு வர்த்தகம் காணப்படுகிறது. என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை அடைந்தன. பி.எஸ்.இ.,யின் குறியீடான, ‘சென்செக்ஸ்’ அதன், 30,000 புள்ளிகளைக் கடந்தது. அது போல, என்.எஸ்.இ.,யின் குறியீடான, ‘நிப்டி’ 9,300 புள்ளிகளை கடந்தது. வரும் நாட்களில் இந்த உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று விடுமுறை என்பதால், நாளை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. இம்முறை அந்த அறிக்கையில் அந்நிறுவனங்களின் சரியான வளர்ச்சி விபரங்களை தெரிவிக்க முடியாமல் போகலாம்.
காரணம் மார்ச், 30 – 31 தேதிகளில், புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக, வாகனங்களை மிக அதிக தள்ளுபடி விலையில் அவை விற்றன. இரு சக்கர வாகனம், நான்கு சக்கர கனரக வாகனங்கள் விற்பனை குறைந்த அளவில் இருக்கக் கூடும். இந்த வாரத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய காலாண்டு முடிவுகள் வங்கி துறை சார்ந்ததாகும். வங்கித்துறையில் முக்கியமான முடிவுகள் ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி., ஆகும். மேலும் நிதித் துறை சார்ந்த இதர நிறுவனங்களான ஆர்.பி.எல்., வங்கி, ஈக்யூடாஸ் பாரத் பைனான்ஸ் போன்றவையும் முக்கியமானவை ஆகும்.
டயர் உற்பத்தியில் உள்ள, எம்.ஆர்.எப்., அப்பல்லோ மற்றும் எக்ஸைடு பேட்டரி ஆகிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையும் இவ்வாரம் வெளிவர உள்ளது. ஏப்., மாதத்தில் பி.எம்.ஐ., எனப்படும் சேவை மற்றும் தொழிற்சாலை துறையின் விபரம் சந்தையின் போக்கில் மாற்றம் நிகழ உதவும்.எப்.ஐ.ஐ., விற்கும் நிலையிலும், டி.ஐ.ஐ., கொள்முதல் நிலையிலும் உள்ளன. சர்வதேச சந்தையில் அமெரிக்க வட்டி விகிதம் குறித்த கூட்டம், மே 5ல் வெளியாக இருக்கும் என்.எப்.ஏ., எனப்படும் பொருளாதார காரணி போன்றவற்றையும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.என்.எஸ்.இ.,யின் குறியீடான நிப்டி, 9200 – 9460 என்ற நிலையில் இந்த வாரம் வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தில் கவனிக்க வேண்டிய 5 பங்குகள் (விலை – ரூபாயில்)நிறுவனம் விலை ஆர் எஸ் ரிலையன்ஸ் இன்ப்ரா., 596.25 624 573 எல் அண்டு டி பைனான்ஸ் 127.60 134–141 121 பவர்கிரிட் 208 213–220 203பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் 351.80 367 344
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|