பதிவு செய்த நாள்
06 மே2017
04:29
தமிழகத்தில், டயர் உற்பத்தி ஆலையை துவங்க, ‘சீயட்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, வாகன உற்பத்தியில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இங்கு, ‘ஹுண்டாய், போர்டு, ரெனோ – நிஸான், டெய்ம்லர், யமஹா’ என, ஏராளமான வாகன உற்பத்தி ஆலைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. அது போல், வாகனம் தொடர்புடைய இதர உதிரி பாக ஆலைகளும் ஏராளமாக உள்ளன.
இதன் விளைவாக, பிரபல, டயர் உற்பத்தி நிறுவனமான, ‘சீயட்’ தமிழகத்தில் ஆலை துவங்க திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, தமிழக தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், நாட்டிலேயே அதிகளவில் டயர்களை தயாரிக்கும், எம்.ஆர்.எப்., நிறுவனம், அரக்கோணம், பெரம்பலுார் ஆகிய இடங்களிலும், பிரெஞ்சு நாட்டின், மிஷலின் டயர் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையிலும் ஆலைகளை, ஏற்கனவே அமைத்துள்ளன.
இதுதவிர, ‘சீயட்’ டயர் நிறுவனமும், தமிழகத்தில் ஆலை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், உயரதிகாரிகளை சமீபத்தில் சந்தித்துவிட்டு சென்றுள்ளனர். அவர்கள், தற்போது நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை அவர்கள் முடித்த பின், அடுத்தகட்ட பேச்சு நடைபெறும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், சேலம் மாவட்டம், சங்ககரியில், ‘சீயட்’ நிறுவனம், டயர் பராமரிப்பு நிலையத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.-நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|