தமிழகத்தில் டயர் உற்பத்தி ஆலை துவங்குகிறது ‘சீயட்’ நிறுவனம்தமிழகத்தில் டயர் உற்பத்தி ஆலை துவங்குகிறது ‘சீயட்’ நிறுவனம் ... ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்  நிகர லாபம் ரூ.556 கோடியாக உயர்வு ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.556 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
குறைந்த விலை வீடுகளுக்கு கடன் வழங்க வங்கிகள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
04:30

மும்பை,:வங்­கி­கள், 10 லட்­சம் ரூபாய்க்கு உட்­பட்ட, குறைந்த விலை வீடு­க­ளுக்கு கடன் வழங்க, மிகுந்த ஆர்­வம் காட்டி வரு­கின்றன.வங்­கி­யில் கடன் வாங்கி, திரும்­பச் செலுத்­தா­மல் ஏய்க்­கும் விஜய் மல்­லையா போன்ற பெரும் பணக்­கா­ரர்­களை விட, குறைந்த விலை வீடு­க­ளுக்கு கடன் வாங்­கு­வோர், நேர்­மை­யாக, கடனை, வட்­டி­யு­டன் திரும்­பச் செலுத்தி வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
வாய்ப்பு
இது குறித்து, கடன் தக­வல் நிறு­வ­ன­மான, ‘சிபில்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:வங்­கி­கள், 2012 – 16 வரை­யி­லான ஐந்து ஆண்­டு­களில், 35 லட்சம் பேருக்கு, குறைந்த விலை வீடு­கள் பிரி­வில், கடன் வழங்­கி­உள்ளன. இவ்­வகை கடன் பிரி­வில், வங்­கி­கள், ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 23 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்ளன.அதே சம­யம், இதே காலத்­தில், கடனை திரும்­பச் செலுத்த தவ­றி­யோர் அல்­லது தாம­த­மாக செலுத்­து­வோ­ரின் கடன் தொகை, 1 சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே உள்­ளது.இத­னால், குறைந்த விலை வீட்­டு­வ­ச­திக் ­கான கடன்­களை வழங்க, வங்­கி­கள் அதிக ஆர்­வம் காட்டி வரு­கின்றன. வங்­கி­களின் கடன் வளர்ச்­சிக்கு, இப்­பி­ரி­வில் பிர­மா­த­மான வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன.
வளர்ச்சி
மதிப்­பீட்டு காலத்­தில், குறைந்த விலை வீடு­கள் பிரி­வில், சரா­ச­ரி­யாக, 4.10 லட்­சம் ரூபாய் கட­னாக பெறப்­ப­டு­கிறது. இது, 2009 – 10ம் நிதி­யாண்­டில், 4.80 லட்­ச­ம் ரூபாயாக இருந்­தது.வீடு­கள் விலை உயர்ந்து வரு­வ­தால், குறைந்த விலை வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கிறது. இது, இப்­பி­ரி­விற்­கான வங்­கி­களின் கடன் வளர்ச்­சிக்கு வித்­திட்­டுள்­ளது. வரும் ஆண்­டு­களில், ஏரா­ள­மான சிறிய வங்­கி­கள், நுண்­க­டன் நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, குறைந்த விலை வீட்­டுக் கடன் பிரி­வில் விறு­வி­றுப்­பாக கள­மி­றங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.
‘டாப் – 5’ல் தமி­ழ­கம்கடந்த, 2012 – 16 வரை­யி­லான ஐந்து ஆண்­டு­களில், குறைந்த வரு­வாய் வீட்­டு ­வ­சதி கடன் அளித்த வகை­யில், தமி­ழகம், மஹா­ராஷ்­டிரா, குஜ­ராத், மத்­திய பிர­தே­சம், ஆந்­திரா ஆகிய மாநி­லங்­கள், முதல் ஐந்து இடங்­களை பிடித்­துள்ளன. இப்­பி­ரி­வில் துவக்­கப்­பட்ட புதிய கணக்­கு­களில், இந்த ஐந்து மாநி­லங்­களும், 60 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டு உள்ளன.
யாருக்கு சலுகை?குறைந்த விலை வீட்டு திட்­டத்­தில் மத்­திய அர­சின் சலு­கை­களை பெற, பொரு­ளா­தா­ரத்­தில் பின்­தங்­கி­யோ­ரின் ஆண்டு வரு­வாய், 3 லட்­சம் ரூபாய்க்கு மிகா­மல் இருக்க வேண்­டும். இது, நடுத்­தர வரு­வாய் பிரி­வி­ன­ருக்கு, 3 – 6 லட்­சம் ரூபா­யாக உள்­ளது. எனி­னும், இந்த வரம்பு, மாநில அர­சு­களின் கொள்­கையை பொறுத்­துள்­ளது. குறைந்த விலை வீடு­கள் வாங்க, 6 லட்­சம் ரூபாய் வரை பெறும் கட­னுக்கு, வட்டி மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. கடன் தவ­ணையை, 20 ஆண்­டு­களில் திரும்­பச் செலுத்­தும் வசதி உள்­ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)