பதிவு செய்த நாள்
19 மே2017
12:06
புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே உயர்வதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியவில்லை. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி ஏறக்குறைய 10,000 தொழில்நிறுவனங்களில் 7.8 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
உ.பி.,யில் மட்டும் 1 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை குறைத்து வருவதும் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாததற்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து உள்ளிட்ட 8 துறைகளில் 2.3 லட்சம் வேலைவாய்ப்புக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கினாலும் குறைந்த அளவே சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்த துறைகளுக்கு வேலைக்கு செல்ல யாரும் தயாராக இல்லை.
நாட்டில் 61 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டு முழுவதும் வேலையில் உள்ளனர். 34 சதவீதம் பேர் அதிகபட்சமாக 6 முதல் 11 மாதங்கள் மட்டுமே ஒருவேலையில் இருக்க விரும்புகிறார்கள். 68 சதவீதம் வீடுகளின் மாத வருமானம் ரூ.10,000 ஆகு மட்டுமே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|