பதிவு செய்த நாள்
20 மே2017
07:14
சென்னை;‘‘அடுத்த, 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகன துறையின் பங்களிப்பு, தற்போதைய, 7.1 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயரும்,’’ என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்து உள்ளார்.முதலீடு:சென்னை அருகே, ஒரகடம் சிப்காட் வளாகத்தில் உள்ள, ஜி.ஏ.ஆர்.சி., எனப்படும், சர்வதேச வாகன ஆய்வு மையம், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் வாகனங்களை சோதிக்க, பிரத்யேக சோதனை வழித்தடத்தை அமைத்துள்ளது.
இதை, ஆனந்த் கீதே திறந்து வைத்து பேசியதாவது:வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னையில், இந்த சோதனை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் துறையில், அதிக முதலீடுகள் குவியும். மேலும், பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க, இது போன்ற வசதிகள் துணை புரியும். இந்தியா, இருசக்கர வாகன தயாரிப்பில், சமீபத்தில், சீனாவை விஞ்சியுள்ளது.
துாய்மையான, பாதுகாப்பான, குறைந்த செலவில் போக்குவரத்து மேற்கொள்வதற்கான புதிய வழிகளை, அரசு ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் ஆய்வு, மேம்பாடு மற்றும் தயாரிப்புத் துறையில், வேலைவாய்ப்புகள் பெருகும்.
மின் வாகனம்:‘பேம் இந்தியா’ திட்டத்தின் கீழ், மின் வாகனங்களை, அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும். நாடு முழுவதும், மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது, எரிபொருள் தேவை, 64 சதவீதம் குறையும். அது போல, வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு, 37 சதவீதமும் குறையும் என, ‘நிடி ஆயோக்’ மதிப்பிட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|