பதிவு செய்த நாள்
20 மே2017
07:15
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, அவற்றின் பெட்ரோல் ‘பங்க்’களில், சந்தையை விட, குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் ஆகியவற்றை விற்பனை செய்ய உள்ளன.
பொதுத் துறையைச் சேர்ந்த, எனர்ஜி எபிஷியன்சி சர்வீசஸ் நிறுவனம், மின் சாதனங்களை குறைந்த விலையில் மொத்தமாக கொள்முதல் செய்து, இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கும்.இந்நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும், 56 ஆயிரம் பெட்ரோல் ‘பங்க்’கள் உள்ளன. அவற்றில், மக்கள், எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், மின்விசிறி ஆகியவற்றை, முறையே, 65 ரூபாய், 230 ரூபாய் மற்றும் 1,150 ரூபாய்க்கு வாங்கலாம்.
மத்திய அரசு, மின் சிக்கனத்தை வலியுறுத்தி, எல்.இ.டி., பல்பு விற்பனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, எனர்ஜி எபிஷியன்சி சர்வீசஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், மின் வினியோக நிறுவனங்கள், வலைதளங்கள் ஆகியவற்றின் வாயிலாக, எல்.இ.டி., பல்புகள் மற்றும் டியூப்லைட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|