பதிவு செய்த நாள்
24 மே2017
17:45
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதிலும் வர்த்தகம் முடியும் தருவாயில் சரிவை சந்தித்ததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் இன்று(மே 24-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 120 புள்ளிகளும், நிப்டி 22 புள்ளிகள் உயர்வுடன் இருந்த நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிய தொடங்கி, இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாகவும் பங்குச்சந்தைகள் சரிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 63.61 புள்ளிகள் சரிந்து 30,301.64-ஆகவும், நிப்டி 25.60 புள்ளிகள் சரிந்து 9,360.55-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|