பதிவு செய்த நாள்
24 மே2017
23:47
மும்பை : வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்வது குறித்து எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், 90 சதவீத ஊழியர்கள், இம்முறையிலான வேலையை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், 70 சதவீத நிறுவனர்கள், இது வசதியானதாக இல்லை என, தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஜாப் நிறுவனம், 1,100 ஊழியர்களிடமும், 800 நிறுவன அதிபர்களிடமும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்வது குறித்து கருத்து கேட்டு, அதை வெளியிட்டுள்ளது.
இந்த சர்வேயில், நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க சில முடிவுகள்: சுமார், 60 சதவீத நிறுவனங்களில், வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்த முழுமையான கொள்கை திட்டங்கள் எதுவும் இல்லை. 70 சதவீத நிறுவன உரிமையாளர்கள், இந்த முறையால் உற்பத்தி திறனுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதுகின்றனர். 80 சதவீத நிறுவனத்தினர், ஊழியர்களை கண்காணித்து, வேலைகளை பெற போதுமான வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளனர். 30 சதவீத நிறுவனத்தினர், நிறுவனத்தின் உயரதிகாரிகள், இம்முறையை செயல்படுத்துவதற்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளனர். 40 சதவீத நிறுவனத்தினர், இம்முறையில் செயல்படுவது, நிறுவன பிராண்டின் நற்பெயரை அதிகரிக்க உதவுவதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|