சீனாவில் ஆலை அமைக்கிறது சோனாலிகா டிராக்டர் நிறுவனம்சீனாவில் ஆலை அமைக்கிறது சோனாலிகா டிராக்டர் நிறுவனம் ... சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு : 64.48 சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு : 64.48 ...
இந்திய தகவல் தொழிற்நுட்ப துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்: மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2017
23:48

புதுடில்லி : தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யில், வேலை வாய்ப்­பு­கள் குறை­யும் என, வெளி­யான தக­வலை மறுத்­துள்ள மத்­திய அரசு, அடுத்த எட்டு ஆண்­டு­களில், 30 லட்­சம் வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என, தெரி­வித்து உள்­ளது.

‘ஐ.டி., எனப்­படும், தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யில், புதிய தொழிற்­நுட்­பங்­களை புகுத்த தவ­றி­ய­தால், ஆண்­டுக்கு, 2 லட்­சம் வீதம், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 6 லட்­சம் பேர் வேலை­யி­ழப்­பர்’ என, சமீ­பத்­தில், ஹெட் ஹன்­டர்ஸ் நிறுவ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

வளர்ச்சி:
இது குறித்து, மத்­திய அர­சின் மூன்­றாண்டு சாதனை விளக்க உரை­யில், மத்­திய சட்­டம் மற்­றும் தக­வல் தொழிற்­நுட்­பத் துறை அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் கூறி­ய­தா­வது: ஐ.டி., நிறு­வ­னங்­கள், நேர­டி­யாக, 40 லட்­சம் பேருக்­கும், மறை­மு­க­மாக, 1.30 கோடி பேருக்­கும் வேலை வாய்ப்பை வழங்கி வரு­கின்றன. அமைச்­ச­கத்­தின் நட­வ­டிக்­கை­யால், சிறிய நக­ரங்­க­ளி­லும், பி.பி.ஓ., எனப்­படும், வெளி­யா­ருக்கு பணி­களை செய்து முடிக்­கும் நிறு­வ­னங்­கள் தோன்றி உள்ளன. இந்­திய சாப்ட்­வேர் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்­காம்’ 4 – 5 ஆண்­டு­களில், 20 – 25 லட்­சம் வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என, மதிப்­பிட்டு உள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில், ஐ.டி., துறை வேலை வாய்ப்பு அதி­க­ரிக்­கும் என, டீம் லீஸ் நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை கூறு­கிறது. மேலும், 2016 அக்., முதல், இந்­தாண்டு மார்ச் வரை­யி­லான ஆறு மாதங்­களில், ஐ.டி., நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர் தேர்வு, முந்­தைய ஆறு மாதங்­களை விட, 4 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. மின்­னணு வணி­கம் மற்­றும் தொழில்­நுட்­பம் சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர் தேர்வு, 2 சத­வீ­தம் உய­ரும்; வேலை வாய்ப்பு, 14.94 சத­வீ­தம் வளர்ச்சி காணும் என, ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்டு உள்­ளது.

முதலீடு:
கடந்த, 2014ல், மின்­னணு சாத­னங்­கள் தயா­ரிப்­பில், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு முத­லீட்டு திட்­டங்­கள் இருந்­தன. இது, தற்­போது, 1.43 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யா­வில், 72 மொபைல் போன் நிறு­வ­னங்­கள் மூலம், 1 லட்­சம் பேர் நேர­டி­யா­க­வும், 3 லட்­சம் பேர் மறை­மு­க­மா­க­வும் வேலை வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். மொபைல் போன் தயா­ரிப்­பில், 2014 – 15ல் மேற்­கொள்­ளப்­பட்ட, 18,992 கோடி ரூபாய் அள­வி­லான முத­லீடு, 2016 – 17ல், 89,756 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

ஆக, இந்­தி­யா­வில், ஐ.டி., மற்­றும் ஐ.டி., சார்ந்த துறை­கள் சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரும் நிலை­யில், வேலை வாய்ப்பு குறை­யும் என கூறப்­ப­டு­வதை, நான் வன்­மை­யாக மறுக்­கி­றேன். ஐ.டி., துறை அமைச்­சர் என்ற முறை­யில், வேலை வாய்ப்பு குறை­யாது என்­றும் உறு­தி­யாக கூறு­கி­றேன். இன்­னும் சொல்­லப் போனால், மின்­னணு பொரு­ளா­தா­ரம் பர­வ­லா­கும்­பட்­சத்­தில், மிகச் சிறந்த எழுச்­சியை, ஐ.டி., துறை காணும். வரும், 2025ல், 25 – 30 லட்­சம் வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

கிரா­மப்­பு­றங்­களில், அரசு மற்­றும் இணை­யம் சார்ந்த பணி­க­ளுக்­காக, 2.5 லட்­சம் பொது சேவை மையங்­கள் திறக்­கப்­பட்டு உள்ளன. இவை, 1,800 கோடி ரூபாய் வரு­வாய் ஈட்­டி­யுள்ளன. அதில், ஆதார் சார்ந்த சேவை­கள் வாயி­லாக, 600 கோடி ரூபாய் ஈட்­டப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)