பதிவு செய்த நாள்
26 மே2017
14:03
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 31,000 புள்ளிகளையும், நிப்டி 9600 புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளன. பகல் 1.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 275.18 அதிகரித்து 31,025.21 புள்ளிகளாகவும், நிப்டி 80.25 புள்ளிகள் உயர்ந்து 9590 புள்ளிகளாகவும் இருந்தன.
மார்ச் மாத காலாண்டு நிகரலாபத்தில் மாருதி சுசுகியின் புதிய சாதனை, ஹச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை பங்குச்சந்தைகள் உச்சம் தொட்டத்தற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் குறிப்பிடப்படும் அளவிற்கு லாபம் ஈட்டி உள்ளன.
பங்குச்சந்தைகளின் இந்த அதிரடி உயர்வு முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|