பதிவு செய்த நாள்
28 மே2017
06:08
மும்பை : ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில், இன்போசிஸ், விப்ரோ, காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், குடியிருப்புகளின் விற்பனை பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, ஜோன்ஸ் லாங் லாசல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில், 16 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் தான், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ளன.எனினும், ஐ.டி., துறையின் ஆட்குறைப்பில், ஐதராபாத், மும்பை, நொய்டா போன்ற நகரங்களிலும், குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஐ.டி., துறையில், 30 – 40 வயதுள்ளோர் மற்றும் அதற்கு மேற்பட்டோர், ஆண்டுக்கு, 20 – 60 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர்.பெங்களூரில், இப்பிரிவில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள், நடுத்தரமான பிரீமியம் குடியிருப்புகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இவர்கள், வேலை இழப்பிற்கு ஆளாகும்பட்சத்தில், நடுத்தர பிரீமியம் குடியிருப்பு துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.சில ஆண்டுகளாக, ஆடம்பர வீடுகளின் விற்பனை பாதிக்கப்பட்ட போதிலும், முன்னணி நிறுவனங்களின் நடுத்தர பிரீமியம் குடியிருப்பு திட்டங்களுக்கு வரவேற்பு காணப்பட்டது.ஐ.டி., துறையின் ஆட்குறைப்பால், இனி, இத்தகைய குடியிருப்புகளுக்கான தேவை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அரசின் ஆதரவு, குறைந்த வட்டி போன்றவற்றால், நடுத்தர குடியிருப்பு திட்டங்களுக்கு, தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|