பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
16:02
புதுடில்லி : ஒரே நாளில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதற்கு மார்ச் மாதம் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தடையை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், தடையை மீறி ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணபரிவர்த்தனை செய்தால், அந்த பணத்தை பெறுபவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற தடையை மீறி பணபரிவர்த்தனை நடந்தால் அதுபற்றிய தகவலை blackmoneyinfo@incometax.gov.in என்ற முகவரிக்கு இமெயிலாக அனுப்பலாம்.
ரூ.2 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதற்கான கட்டுப்பாடு அரசு ரசீது, வங்கி சார்ந்த நிறுவனங்கள், தபால் நிலைய வங்கி சேமிப்புக்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. கறுப்பு பண பதுக்கலை தடுப்பதற்காகவே இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|