ஒலிம்பிக்ஸ் - மெக்டொனால்ட்ஸ் 50 ஆண்டுகால உறவு நிறைவுஒலிம்பிக்ஸ் - மெக்டொனால்ட்ஸ் 50 ஆண்டுகால உறவு நிறைவு ... பருப்பு, பருத்திக்கான ஆதார விலை உயர்கிறது பருப்பு, பருத்திக்கான ஆதார விலை உயர்கிறது ...
இனி புது வீடு வாங்கினால் 12 % வரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
15:43

புதுடில்லி : ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி.,யில் புதிதாக வீடு வாங்குவோருக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதாந்திர தவணை முறையில் வீடு வாங்குவோர் அதற்கு சேவை கட்டணமாக 4.5 சதவீதம் செலுத்தி வருகிறார்கள். இந்த வரி ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வீடு வாங்குவோரை கடுமையாக பாதிக்கும். இந்த வரி விதிப்பு முறை பற்றி ஆடிட்டர் சுந்தரராஜன் கூறியதாவது:
நம்நாட்டில் தவணை முறையில்தான் அதிகம் பேர் வீடு வாங்குகிறார்கள். இதற்காக பில்டரிடம் முன் பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு மீதி தொகையை மாதாந்திர தவணை முறையில் வங்கியில் செலுத்துகிறார்கள். இதற்கு தற்போது 4.5 சதவீதம் சேவை வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. இது 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யில் உயர்த்தபட்டு உள்ளது. அதாவது ஒரு புது வீட்டின் மொத்த விலைக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 12 சதவீதம் வரி விதிக்கப்படும். அந்த வரியுடன் சேர்த்து தான் மாத தவணை தொகையை செலுத்த வேண்டும்.
இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் மாதாந்திர தவணை தொகை இனி அதிகரிக்கும். ஏற்கனவே வீடு வாங்கி தவணை செலுத்தி வருபவர்களும் ஜூலை 1-ந்தேதி முதல் மீதம் உள்ள தவணை தொகையை கூடுதலாக செலுத்த வேண்டி வரும். இதுதவிர வங்கிகளிலும் கடன் பெறும் போது சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் மீதம் உள்ள தொகையை தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் போது அதற்கும் வரி விதிக்கப்படுவதால் தவணை தொகை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது புதிதாக வீடு வாங்குவோரையும், தவணை முறையில் திருப்பி செலுத்துவோரையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)