பதிவு செய்த நாள்
17 ஜூன்2017
15:54
புதுடில்லி : பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலைக்கு விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2015-16 ம் ஆண்டில் 16.35 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தி, 2016-17 ம் ஆண்டில் 22.40 மில்லியன் டன்னாக குறைந்தது. நடப்பு உற்பத்தி ஆண்டில் பருவமழை நன்றாக இருக்கும் என்பதால், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளை ஆதரிக்கும் வகையிலும் அமையும்.
துவரம்பருப்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,450 ஆக அதிகரித்துள்ளது. பாசிப்பருப்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,570 ஆக உயர்ந்துள்ளது. உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.5,400 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|