பதிவு செய்த நாள்
18 ஜூன்2017
05:20
புதுடில்லி : ‘‘அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் மின்னணு பொருளாதாரத்தை, 1 லட்சம் கோடி டாலராக உயர்த்த, ஐ.டி., துறையினர் உதவ வேண்டும்,’’ என, மத்திய தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர், டில்லியில், இந்தியாவின் மின்னணு பொருளாதார வளர்ச்சி கருத்தரங்கில் பேசியதாவது:தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணு வர்த்தகம், மின்னணு சாதனங்கள் தயாரிப்பு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள், கணினியில் நாச வேலைகளை தடுக்கும் சைபர் பாதுகாப்பு துறை ஆகியவற்றில், பல்லாயிரம் கோடி டாலர் வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.அதனால், அடுத்த ஏழு ஆண்டுகளில், இந்தியாவின் மின்னணு பொருளாதாரம், 1 லட்சம் கோடி டாலராக உயரும். அது, ஒரு பெரிய இலக்கே அல்ல. ஆனால், எதற்காக அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது தான், என் கேள்வி. ஏன், அந்த இலக்கை, 3 – 4 ஆண்டுகளுக்குள் எட்ட முடியாதா? அதற்கு, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் உதவ வேண்டும்.இந்திய தகவல் தொழிற்நுட்பத் துறையின் வருவாய், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது; ஏற்றுமதி, 7.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இத்தகைய சூழலில், உள்நாட்டு மின்னணு துறையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அனைவரும் பயன்படுத்தும் தொழிற்நுட்பத்தை உருவாக்குங்கள். வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துங்கள். அனைத்திலும் மின்னணு செயல்பாடுகளை பிணைக்கும் சூழலை அமையுங்கள் என, தகவல் தொழிற்நுட்பத் துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.மேலும், கணினியில் நடைபெறும் பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் உதவும், ‘சைபர்’ பாதுகாப்பு துறையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|