‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சி 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சி 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு ... ‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது ‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது ...
‘புற­வ­ழி­யில் இறக்­கு­ம­தி­யா­கும் உருக்கு பொருட்­களை அனு­மதிக்க மாட்­டோம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2017
05:22

புவனேஷ்வர் : ‘‘சீன உருக்கு பொருட்­கள் சில­வற்­றுக்கு தடை விதித்­துள்ள நிலை­யில், அவை பாத்­தி­ரங்­கள் அல்­லது முழு­மை­யான தயா­ரிப்­பு­க­ளாக இறக்­கு­ம­தி­யா­கின்­ற­னவா என்­பதை, மத்­திய அரசு தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கிறது. அத்­த­கைய இறக்­கு­ம­தியை, ஒரு­போ­தும் அனு­ம­திக்க முடி­யாது,’’ என, மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் உறு­திப்­பட தெரி­வித்து உள்­ளார்.ஒடி­சா­வில், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது:மலிவு விலை உருக்கு பொருட்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. இதன்­படி, சீனா­வில் இருந்து, ஒரு­சில உருக்கு பொருட்­களை இறக்­கு­மதி செய்ய, தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.ரத்துஅத்­து­டன், உருக்கு பொருட்­க­ளுக்­கான, குறைந்­த­பட்ச இறக்­கு­மதி விலை நிர்­ணய திட்­ட­மும் ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. அது­மட்­டு­மின்றி, பெரும்­பான்மை உருக்கு பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி­யும் விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளால், இந்­தி­யா­வின் உருக்கு இறக்­கு­மதி, 2016 – 17ம் நிதி­யாண்­டில், 37 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.இருந்த போதி­லும், இன்­னும் சில உருக்கு பொருட்­கள், பாத்­தி­ரங்­கள் அல்­லது முழு­மை­யாக தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­கள் என்ற பெய­ரில், புற­வ­ழி­யாக நுழைந்து கொண்­டி­ருக்­கின்றன. அவற்றை தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கி­றோம். அத்­த­கைய வர்த்­த­கத்தை, ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது.நாட்­டின் உருக்கு துறை, ஆண்­டுக்கு, 7 சத­வீத சரா­சரி வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், உருக்கு ஏற்­று­மதி, 102 சத­வீ­தம் உயர்ந்து, 40 லட்­சம் டன்­னில் இருந்து, 82 லட்­சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.ரூ.40,000 கோடிஎனி­னும், இந்­தி­யா­வில் தனி­ந­பர் உருக்கு பயன்­பாடு, ஆண்­டுக்கு, 64 கிலோ என்ற அள­வில் மிகக் குறை­வாக உள்­ளது. இதை, 2031ல், 160 கிலோ­வாக உயர்த்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.இதற்கு மத்­திய அரசு, அடிப்­படை கட்­ட­மைப்பு துறைக்கு ஒதுக்­கீடு செய்ய உள்ள, 4 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான சாலை, ரயில், துறை­மு­கம் உள்­ளிட்ட கட்­டு­மான திட்­டங்­கள் துணை புரி­யும். இவற்­றுக்­கான ஒதுக்­கீட்­டில், 10 சத­வீ­தம் அதா­வது, 40 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, உருக்கு பொருட்­க­ளுக்கு செல­வி­டப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.மத்­திய அர­சின், அனை­வ­ருக்­கும் வீடு திட்­டம், கிரா­மங்­களில் கழிப்­பறை வச­தி­களை ஏற்­ப­டுத்­தும், ‘துாய்மை இந்­தியா’ திட்­டம் ஆகி­யவை, உருக்கு பொருட்­க­ளுக்­கான தேவையை அதி­க­ரிக்க துணை புரி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மீண்டும் வளர்ச்சிகடந்த இரு ஆண்­டு­க­ளாக, உருக்கு துறை கடு­மை­யான சோத­னை­களை சந்­தித்து வந்­தது. அதி­லி­ருந்து, 6 – 8 மாதங்­க­ளாக விடு­பட்டு, தற்­போது வளர்ச்­சிப் பாதை­யில் நடை­போட்டு வரு­கிறது. இதை­ய­டுத்து, இத்­து­றை­யின் வேலை­வாய்ப்­பில் காணப்­பட்ட சுணக்க நிலை­யும் நீங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.சவுத்ரி பிரேந்­தர் சிங் மத்­திய உருக்கு துறை அமைச்­சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)