பதிவு செய்த நாள்
18 ஜூன்2017
05:22
புவனேஷ்வர் : ‘‘சீன உருக்கு பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதித்துள்ள நிலையில், அவை பாத்திரங்கள் அல்லது முழுமையான தயாரிப்புகளாக இறக்குமதியாகின்றனவா என்பதை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அத்தகைய இறக்குமதியை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது,’’ என, மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.ஒடிசாவில், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:மலிவு விலை உருக்கு பொருட்கள் இறக்குமதியால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து, ஒருசில உருக்கு பொருட்களை இறக்குமதி செய்ய, தடை விதிக்கப்பட்டு உள்ளது.ரத்துஅத்துடன், உருக்கு பொருட்களுக்கான, குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணய திட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பான்மை உருக்கு பொருட்கள் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், இந்தியாவின் உருக்கு இறக்குமதி, 2016 – 17ம் நிதியாண்டில், 37 சதவீதம் குறைந்துள்ளது.இருந்த போதிலும், இன்னும் சில உருக்கு பொருட்கள், பாத்திரங்கள் அல்லது முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற பெயரில், புறவழியாக நுழைந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அத்தகைய வர்த்தகத்தை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.நாட்டின் உருக்கு துறை, ஆண்டுக்கு, 7 சதவீத சராசரி வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், உருக்கு ஏற்றுமதி, 102 சதவீதம் உயர்ந்து, 40 லட்சம் டன்னில் இருந்து, 82 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.ரூ.40,000 கோடிஎனினும், இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு, ஆண்டுக்கு, 64 கிலோ என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. இதை, 2031ல், 160 கிலோவாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கு மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ள, 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை, ரயில், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்கள் துணை புரியும். இவற்றுக்கான ஒதுக்கீட்டில், 10 சதவீதம் அதாவது, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, உருக்கு பொருட்களுக்கு செலவிடப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்டம், கிராமங்களில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும், ‘துாய்மை இந்தியா’ திட்டம் ஆகியவை, உருக்கு பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க துணை புரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் வளர்ச்சிகடந்த இரு ஆண்டுகளாக, உருக்கு துறை கடுமையான சோதனைகளை சந்தித்து வந்தது. அதிலிருந்து, 6 – 8 மாதங்களாக விடுபட்டு, தற்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. இதையடுத்து, இத்துறையின் வேலைவாய்ப்பில் காணப்பட்ட சுணக்க நிலையும் நீங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுத்ரி பிரேந்தர் சிங் மத்திய உருக்கு துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|