பதிவு செய்த நாள்
19 ஜூன்2017
00:12
பெண்களுக்கான நிதி வழிகாட்டுதல் வழிமுறைகளை விவரித்து, ‘பிரம் வொரி டு வெல்தி’ புத்தகத்தை எழுதியுள்ள செல்லீ கேம்பல், நிதி விஷயங்களில் வெற்றி பெறுவதோடு, மன அழுத்தத்தை வென்று சமமான வாழ்க்கையை பெறுவது சாத்தியம் என்கிறார். இதற்கெல்லாம் அடிப்படையாக நம்பிக்கையை அவர் முன்வைக்கிறார்:
வெற்றிகரமான பெண்கள் நம்பிக்கை மிக்கவர்களாக இருக்கின்றனர். நம்பிக்கை எந்த அளவு அதிகம் பளிச்சிடுகிறதோ, அந்த அளவு வசீகரம் மிக்கவர்களாக இருப்பதாக மற்றவர்கள் சொல்வர். வசீகரம் அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்களை அதிகம் கவர முடியும். ஏனெனில், தாங்கள் தனித்தன்மை மிக்கவர்கள் என்றும், மற்றவர்களால் நகலெடுக்க முடியாது என்றும் அவர்களுக்குத் தெரியும். அதிக பணம் ஈட்ட வேண்டும் எனில் இந்த அணுகு முறை தான் உங்களுக்கு தேவை.
இதை ஆணவம் என சிலர் கருதலாம். ஆனால், இது ஆணவம் அல்ல. வெற்றிக்கான இந்த வழியில் இன்னொரு முக்கிய அம்சமும் தேவை. பெண்கள் இதில் மிகவும் வல்லவர்கள். மற்றவர்கள் மீது பரிவு காட்டுவது தான் அது.சொந்த வர்த்தகம் துவங்க அல்லது தொழில் வாழ்க்கையை பெற உங்களுக்கான வழியை உலகில் தேட முயலும் போது, முதல் தடை உள்ளுக்குள் இருந்து எழலாம். ரிஸ்க் எடுக்க உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.மற்றவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் அவர்கள் தெரிவித்த நல்ல கருத்துக்கள் நம்பிக்கை அளித்திருக்கும். மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
உங்கள் திறன், தகுதி, உங்களால் சிறப்பாக செய்யக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அருமையானவர், சிறந்தவர், வெற்றிக்கு தகுதியானவர்.உங்களைப்பற்றி நீங்கள் நல்லவிதமான நம்பிக்கை கொண்டிருப்பது, மற்றவர்கள் ஆதரவை பெற்றுத்தரும். நம்பிக்கை இருக்கும் போது, அதிகம் பொருள் ஈட்ட உங்களுக்கு நீங்களே அனுமதி வழங்கலாம். இதற்கு நீங்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை விலக்க வேண்டும். நீங்கள் உதவ வேண்டியவர்களுக்கு உதவி செய்து, உங்களுக்கான வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உங்கள் திறன்களை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்வதை நோக்கமாக கொள்ளுங்கள்.
எல்லாரும் நம்பிக்கையை விரும்புகின்றனர். ஆணவத்தை அல்ல; பதற்றத்தையும் அல்ல. சரியான அளவு நம்பிக்கை உதவும். நான் சிறப்பாக இருக்கிறேன், மக்கள் என்னை விரும்புகின்றனர் எனும் குரல் உங்களுக்குள் கேட்டுக்கொண்டிருந்தால் நல்லது. சிறந்த பயிற்சி, தயாரிப்பு மற்றும் கடின உழைப்பு மூலம் நம்பிக்கை பெற முடியும். நம்பிக்கையில் இருந்து வசீகரம் உண்டாகும். நீங்கள் செய்வதை விரும்பி செய்யும் போது இந்த நம்பிக்கை உண்டாகும். நம்பிக்கை கொண்டு இருப்பது போன்ற உறுதியுடன் செயல்படுங்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|