பதிவு செய்த நாள்
19 ஜூன்2017
00:15
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டும் சூழல் மேம்பட்டு உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார்ட் அப் எனப்படும் புதுயுக நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்கு தேவையான நிதி திரட்டுவதில் கடந்த ஆண்டு சிக்கலான சூழல் நிலவியது. இந்நிலையில் தற்போது இந்நிலை மேம்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரையான காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 138 ஒப்பந்தங்கள் மூலம், 538 மில்லியன் டாலர் திரட்டியுள்ளன. இதே காலத்தில் கடந்த ஆண்டு, 565 மில்லியன் டாலர் திரட்டப்பட்டது. 2014ம் ஆண்டில் இதே காலத்தில், 536 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, மிகச்சிறந்த ஆண்டாக, 2015 அமைந்தது. அந்த ஆண்டு, 173 ஒப்பந்தங்கள் மூலம், 703 மில்லியன் டாலர் திரட்டப்பட்டதாக, ‘வென்ச்சர் இன்டலிஜன்ஸ்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நிதி திரட்டுவதில் நிலவி வந்த சிக்கல் தற்போது மேம்பட்டிருப்பதாக இத்துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நிதி திரட்டுவதில் வழக்கமான ஆண்டாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் ஆதரவும் தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|