பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:22
புதுடில்லி : மத்திய அரசு, பின்னலாடை தொழிலை ஊக்குவிக்க, இரு மாதங்களில், சலுகை அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சக செயலர் ஆனந்த் குமார் கூறியதாவது: குறைந்த தொழிற்நுட்பம் மற்றும் இயந்திர பயன்பாடுகளால், உள்நாட்டில், பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றால், சீன நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை. இதையடுத்து, அனைத்து பின்னலாடை நிறுவனங்களையும், ஒரே சீரான முறையில் ஊக்குவிக்க, மத்திய அரசு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, வரைவறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. எனவே, சலுகை குறித்த அறிவிப்பு, இரு மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, 2016 ஜூனில், 6,006 கோடி ரூபாயை, சிறப்பு சலுகை தொகையாக, ஜவுளி மற்றும் ஆடைகள் துறைக்கு வழங்கியது. இதன் மூலம், மூன்று ஆண்டுகளில், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என, அரசு கருதுகிறது. மேலும், 1,100 கோடி டாலர் முதலீட்டையும், 3,000 கோடி டாலருக்கு ஏற்றுமதியையும் உருவாக்க முடியும் எனவும் அரசு கருதுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|