பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:08
புதுடில்லி : ஜப்பானைச் சேர்ந்த, பியூஜி பிலிம் நிறுவனம், இந்தியாவில், கேமரா விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ஸ்மார்ட் போன்களின் வருகையால், கேமரா பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், தன், இன்ஸ்டென்ட் கேமரா விற்பனையை அதிகரிக்க, பியூஜிபிலிம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யாசுநோபு கூறியதாவது:ஸ்மார்ட் போன்களின் வருகையால், சில ஆண்டுகளாக, கேமரா விற்பனை பாதித்துள்ளது. இருப்பினும், எங்கள் நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பு இல்லை. இந்தியாவில், பியூஜிபிலிமின் விற்றுமுதல், 1,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது, மாதந்தோறும், 5,000 இன்ஸ்டென்ட் கேமராக்கள் விற்கப்படுகின்றன. இந்த கேமராவில், போட்டோ எடுத்த அடுத்த வினாடியே படம் கைக்கு வந்துவிடும். விரைவில், இன்ஸ்டென்ட் கேமராவின் மாத விற்பனையை, 10 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|