பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:09
புதுடில்லி : ‘‘மத்திய அரசின் புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், வீடு, நிலம் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும்,’’ என, வீட்டுவசதி கடன் வழங்கும், எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.அவர், பங்கு முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:இந்திய ரியல் எஸ்டேட் துறை, பல காலமாக, விரும்பத்தகாத நடவடிக்கைகளை சந்தித்து வருகிறது. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாகி உள்ளன.ரியல் எஸ்டேட் சட்டம், வீடு, நிலம் விற்பவர் மற்றும் வாங்குவோர் இடையே, வெளிப்படையான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது; தவறிழைக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கிறது; குடியிருப்பு வாங்குவோர் நலன் பேணுகிறது.ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள், விதிமுறைகளின்படி, கட்டுமான நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும்.இது, கட்டுமான நிறுவனங்களின் செயல்பாடுகளில், ஓர் ஒழுங்குமுறையை கொண்டு வரும். இதனால், அத்தகைய நிறுவனங்கள் மீது, நுகர்வோரிடம் நம்பிக்கை பெருகும். இத்தகைய ஆரோக்கியமான சூழல், ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும்.வீட்டுவசதி துறை குறித்த, மத்திய அரசின் கொள்கைகள் மிக யதார்த்தமாகவும், செயல்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. அதனால், என் நாற்பது ஆண்டு கால அனுபவத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய வீட்டுவசதி துறையின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சிக்கான அஸ்திவாரம், இதுவரை இல்லாத வகையில் மிக வலிமையாக உள்ளது.எண்ணற்ற கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் விளைவாக, வளர்ச்சியின் உச்சத்தை இந்தியா எட்டும். நாட்டின் வருங்காலம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. நாடு வளம் பெற்றால், நாமும் வளம் பெறுவோம்.தாராளமயமாக்கல் காரணமாக, கடந்த, 25 ஆண்டுகளில், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நிறுவனம் பயன்படுத்தி, பல்வேறு நிதிச் சேவைகளில் களமிறங்கியது.நம் துணை நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. அவை, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய, இயக்குனர் குழுக்களின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பங்குச் சந்தையில் இணையக் கூடிய நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.நீண்ட கால மதிப்பை கருத்தில் கொண்டு, எச்.டி.எப்.சி., முதலீட்டாளர்கள், குழும நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மாநில அரசுகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்களை அமைத்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|