பதிவு செய்த நாள்
26 ஜூன்2017
07:43
வருமான வரி தாக்கல், அரசு மானியங்கள் பெறுவது, நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், வங்கி கணக்குகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய வங்கி கணக்கு துவங்க, ‘ஆதார்’ எண் கட்டாயம் என்பதோடு, ஏற்கனவே உள்ள வங்கி கணக்குகளுடனும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணையதளம் மூலம் அல்லது கிளைகள் மூலம் மேற்கொள்ளலாம். பெரும்பாலான வங்கிகள், இணைய வங்கிச் சேவை, ஏ.டி.எம்., – எஸ்.எம்.எஸ்., உள்ளிட்டவை மூலம், இந்த வசதியை வழங்குகின்றன.
இணைய வசதி :
இணைய வங்கிச் சேவை வசதியை பயன்படுத்துபவர்கள், வங்கி இணைய தளத்தில் கணக்குகள் அல்லது சேவைகள் பகுதியில், ஆதார் இணைப் பிற்கான வசதியை அணுகலாம். வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்து, ஆதார் எண்ணை சமர்ப்பித்து, விபரங்களை சமர்ப்பித்த பின், வங்கி இவற்றை சரி பார்த்து இணைப்பை பூர்த்தி செய்யும். இதற்கு, நான்கு நாட்கள் வரை ஆகலாம்.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வழி செய்கின்றன. ஆதார் எண் இணைக்கப்படவில்லை எனில், இது குறித்து, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். வங்கி குறிப்பிடும் எண்ணுக்கு செய்தி அனுப்பி, வங்கி கணக்கு எண் மற்றும் இடைவெளியுடன் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கலாம். இணைப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
ஏ.டி.எம்., மையம் மூலம் :
சில வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் மூலமும், இந்த வசதியை அளிக்கின்றன. ஏ.டி.எம்., மையத்தில், டெபிட் கார்டை ‘ஸ்வைப்’ செய்து, பதிவுகள் பகுதியில் தேர்வு செய்து, ஆதார் பதிவை நாட வேண்டும். அதன் பின் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்து, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். ஒரு சில வங்கிகள், ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதார் எண் இணைப்பு வசதியை வழங்குகின்றன. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பு, சிக்கல் இல்லாத நடைமுறை தான்.
வங்கி கிளைக்கு நேராக சென்று, உரிய விபரங்களை கொடுத்தும், இதை இணைக்கலாம். எனினும் சிறிய கணக்குகளுக்கு இது கட்டாயம் இல்லை. சுய சான்றிதழ் அளித்து, இத்தகைய கணக்கை துவக்கலாம். இந்த வகை கணக்குகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டவை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|