ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
00:39

புது­டில்லி: இந்­தி­யா­வின் நிதி­யாண்டு கணக்கை, ஜன., – டிச., ஆக மாற்­று­வ­தற்கு, மத்­திய அர­சுக்கு, உயர்­மட்­டக் குழு பரிந்­துரை செய்­துள்­ளது.

இந்­தி­யாவை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யர்­கள், பிரிட்­டன் வழக்­கப்­படி, 1867ல், ஏப்., – மார்ச் நிதி­யாண்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­னர். இந்­நி­லை­யில், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்கு, குறிப்­பாக, வேளாண் துறை சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, நிதி­யாண்டை, ஜன., – டிச., ஆக மாற்­று­வது நல்­லது’ என, தெரி­வித்­தது. இது குறித்து ஆராய, முன்­னாள் தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சங்­கர் ஆச்­சார்யா தலை­மை­யில், உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­பட்­டது.

இது குறித்து, சங்­கர் ஆச்­சார்யா கூறி­ய­தா­வது: மத்­திய, மாநில அர­சு­களின் நிதி­யாண்டு, ஏப்., – மார்ச் ஆக உள்­ளது. வேளாண் துறை­யில், ஜன., – மார்ச் வரை, ரபி பரு­வம்; ஏப்., – அக்., வரை, கரீப் பரு­வம்; ஜூலை­யில் அறு­வடை துவக்­கம் என்ற நடை­மு­றை­கள் உள்ளன. பங்­குச் சந்­தை­களில், தீபா­வ­ளியை தொடர்ந்து கார்த்­தி­கை­யில் துவங்­கும், ‘சம்­வாட்’ ஆண்டு, நிதி­யாண்­டாக கடை­பி­டிக்­கப்­ப­டு­கிறது.

அவற்­றின் அடிப்­ப­டை­யில், நிதி­யாண்டை மாற்­று­வ­தில் உள்ள சாதக, பாதக அம்­சங்­கள் ஆரா­யப்­பட்­டன. முடி­வில், நிதி­யாண்டை, ஜன., – டிச., ஆக மாற்­று­வ­தில் உள்ள, பல்­வேறு வச­தி­களை கருத்­தில் கொண்டு, அதை செயல்­ப­டுத்த, மத்­திய அர­சி­டம் பரிந்­து­ரைத்து உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மத்­திய அரசு, 150 ஆண்­டு­க­ளாக பின்­பற்றி வரும் நிதி­யாண்டை மாற்­றி­னால், நவம்­ப­ரில் பட்­ஜெட் தாக்­கல் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். பார்லி., கூட்­டத்­தொ­டர்­க­ளி­லும் மாற்­றம் மேற்­கொள்­ளப்­படும். மத்­திய அரசை பின்­பற்றி, மாநில அர­சு­களும் புதிய நிதி­யாண்டு நடை­மு­றைக்கு மாறும். ம.பி., அரசு, சமீ­பத்­தில், நிதி­யாண்டை, காலண்­டர் ஆண்­டுக்கு மாற்றி, சட்­ட­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. சீனா, ரஷ்யா, மெக்­சிகோ உள்­ளிட்ட, 156 நாடு­களில், ஜன., – டிச., நிதி­யாண்­டாக கடை­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில்,வேளாண் துறை, 15 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில், விவ­சா­யத்தை சார்ந்து, 58 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான குடும்­பங்­கள் உள்ளன. அத­னால், நிதி­யாண்டை மாற்­று­வதே சிறந்­தது. ஜூன் – செப்., இடையே வறட்சி ஏற்­பட்­டால், நவம்­ப­ரில் மத்­திய பட்­ஜெட் தாக்­கல் செய்­யும் போது, நிவா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு, உட­ன­டி­யாக நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யும். இது, வேளாண் துறை வளர்ச்­சிக்­கும் உத­வும்.-அசோக் குலாட்டி,பொரு­ளா­தார வல்­லு­னர், வேளாண் துறை

நிதி­யாண்டை மாற்­று­வ­தால், பெரிய மாற்­றம் ஏதும் ஏற்­ப­டாது. பரு­வ­மழை காலத்­தில் கட்­டு­மான தொழில் பாதிக்­கப்­படும். அதை கருத்­தில் கொண்டு, குறித்த காலத்­தில் பட்­ஜெட் தாக்­கல் செய்ய வேண்­டும்.-பிர­ணாப் சென், புள்ளி விபர துறை முன்­னாள் தலை­வர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)