பதிவு செய்த நாள்
02 ஜூலை2017
10:00
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதை அடுத்து கார்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. கார்களின் விலை ஏற்கனவே இருந்ததை விட 3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியின் பெட்ரோல் ரக கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாட் வரிக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் மாருதி சுசுகி செடான் மாடல் காரான சியாஸ் பெட்ரோல் என்ஜின் கொண்ட உயர் ரக மாடலின் விலையில் ரூ.23,400 வரை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தும் சாதாரண டீசல் என்ஜின் கொண்ட கார்களின் விலை ஒரு லட்சம் வரை அதிகரித்துள்ளது. இவற்றுக்கான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து விலை அதிகமாகியுள்ளது.
எஸ்.யு.வி. மற்றும் ஆடம்பர கார்களின் விலையும் குறைவாகியுள்ளது. பி.எம்.டபுள்.யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலாகும் முன்பே இந்த வரிமுறைக்கு ஏற்ப விலையை மாற்றியமைத்து விட்டன. ஆடம்பர கார் நிறுவனங்களின் சில மாடல்களின் விலை ரூ.10 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பி.எம்.டபுள்.யூ ஐ8 மாடல் காரின் விலை ரூ.48 லட்சம் வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.2.62 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|