பதிவு செய்த நாள்
08 ஜூலை2017
02:44
கோல்கட்டா:‘நாஸ்காம்’ அமைப்பின் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:மேற்கு வங்கத்தில், ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு தேவையான நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இங்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன; திறமையான வல்லுனர்கள் உள்ளனர். ஊழியர்களின் பணி மாறும் விகிதம் மிகக் குறைவாக உள்ளது.அதனால், ஐ.டி., நிறுவனங்களை தொழில் துவங்க அழைக்கிறோம். என்ன தேவை என்பதை நிறுவனங்கள் தெரிவித்தால், அதை செய்து கொடுக்க தயாராக உள்ளோம். எனினும், விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜியின் மகன், தங்கள் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவிற்கு, எஸ்.இ.இசட்., எனப்படும், சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை கோரி உள்ளார். மாநில அரசு கொள்கைப்படி, அதை வழங்க முடியாது. எனினும், பிற சலுகைகள் வழங்க, அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, அசீம் பிரேம்ஜியின் மகன், ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில், ‘‘எப்போதோ கேட்டதை, முதல்வர் இப்போது கூறுகிறார். அது முடிந்து போன கதை. நாங்கள் வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்,’’ என்றார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|