பதிவு செய்த நாள்
08 ஜூலை2017
02:45
புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலானதைத் தொடர்ந்து, கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலை குறைப்பை அறிவித்து வருகின்றன.இதனால், வாகன துறையின் வளர்ச்சி, குறுகிய காலத்திற்கு சிறப்பாக இருக்கும் என, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:எங்கள் சப்ளையர்களில் ஒருவரை தவிர, அனைவரும் எதிர்பார்த்ததை விட, மிக சுமுகமாக, பழைய வரி விதிப்பு நடைமுறையில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறி விட்டனர்.வாகன முகவர்கள், வழக்கமாக, ஆறு வாரங்களுக்கு தேவையான வாகனங்களை, கையிருப்பில் வைத்திருப்பர். அவர்கள், கையிருப்பு வாகனங்களை, ஜி.எஸ்.டி., அமலுக்கு முன் விற்கும் நோக்கில், தள்ளுபடி சலுகைகளை வழங்கினர். இதனால், அவர்களிடம், ஒரு வார விற்பனைக்கான வாகனங்கள் மட்டுமே உள்ளன.
தற்போது, ஜி.எஸ்.டி., அமலாகி விட்டதால், முகவர்கள் அதிகளவில் வாகனங்களை கொள்முதல் செய்யத் துவங்குவர். இதனால், அடுத்த இரு மாதங்களில், வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை உயரும். அதை தொடர்ந்து, விழா மற்றும் பண்டிகை காலம் வருவதால், வாகன விற்பனை சூடுபிடிக்கும்.எனினும், பருவமழை, வாகன கடனுக்கான வட்டி, நாட்டின் பொருளாதார சூழல் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்தே, வாகன துறையின் வளர்ச்சி இருக்கும். மஹாராஷ்டிர அரசு, 2 சதவீத சாலை வரி விதித்திருப்பது சரியல்ல.
இதை, இதர மாநிலங்களும் பின்பற்ற வாய்ப்பு உள்ளது.‘ஹைபிரிட்’ எனப்படும், கலப்பு எரிசக்தியில் இயங்கும் கார்களுக்கு, 28 சதவீத, ஜி.எஸ்.டி., மற்றும் 15 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|