பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
01:06
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், முதன்முறையாக, அமெரிக்காவில் இருந்து, அதிக கந்தக தன்மை உள்ள, ‘மார்ஸ் – பொசைடான்’ என்ற கச்சா எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்கிறது.
‘‘இவை இரண்டிலும், தலா, 5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், செப்., 26 – அக்., 10 வரை இறக்குமதி செய்யப்படும்,’’ என, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு பிரிவின் தலைவர், ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
இம்மாத துவக்கத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், அமெரிக்காவில் இருந்து, 16 லட்சம் பீப்பாய், ‘மார்ஸ்’ கச்சா எண்ணெயை முதன்முதலாக இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கச்சா எண்ணெய் இறக்குமதியில், உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு, அதிகளவில் எரிசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து, குறைந்த விலையுள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய துவங்கி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|