எஸ்.எம்.இ., பிரிவில் சாதனை ரூ.660 கோடி திரட்டப்பட்டதுஎஸ்.எம்.இ., பிரிவில் சாதனை ரூ.660 கோடி திரட்டப்பட்டது ... வணிக நிறுவனங்கள் 24ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யலாம் வணிக நிறுவனங்கள் 24ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யலாம் ...
சரக்கு போக்குவரத்துக்கு குறியீடு; மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
01:10

புதுடில்லி : ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்­ததை அடுத்து, மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான, சரக்கு போக்­கு­ வ­ரத்து குறி­யீட்டு நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­து உள்­ளது.

இது குறித்து, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தைச் சேர்ந்த உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நாடு முழு­வ­தும், ஒரு பொருளை ஒரே விலை­யில் விற்­பனை செய்ய, ஜி.எஸ்.டி., வழி­வ­குக்­கிறது. முன், ஒரு மாநி­லத்­தில் இருந்து வேறொரு மாநி­லத்­திற்­குள் சரக்கு லாரி நுழை­யும் போது, சோத­னைச்­சா­வ­டி­யில் வரி ஆவ­ணங்­களை பரி­சோ­தித்த பின்­னரே, அதி­கா­ரி­கள் அனு­ம­திப்­பர். இத­னால், சரக்கு லாரி­கள் நீண்ட வரி­சை­யில், பல நாட்­கள் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், ஜி.எஸ்.டி.,யில், ஒரே வரி விகி­தம் உள்­ள­தால், மாநில எல்­லை­களில் சோத­னைச்­சா­வ­டி­கள் இன்றி, விரை­வாக சரக்கு போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள முடி­கிறது. இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வி­னம் வெகு­வாக குறை­யும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது போல, சரக்கு போக்­கு­வ­ரத்­தில் உள்ள பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், குறி­யீடு வெளி­யிட திட்­ட­மிட்டு, அதற்­கான ஆய்­வுப் பணி­கள், ‘டெலாய்ட்’ நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்ளன.

இதை­ய­டுத்து, இந்­தாண்டு இறுதி அல்­லது அடுத்த ஆண்டு துவக்­கத்­தில், மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­களின் சரக்கு போக்­கு­வ­ரத்து குறி­யீடு வெளி­யி­டப்­படும். இது, சரக்கு போக்­கு­வ­ரத்­தின் வளர்ச்­சிக்கு உத­வும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

உலக வங்கி, 160 நாடு­களின் சரக்கு போக்­கு­வ­ரத்து செயல்­பா­டு­களின் தர­வ­ரிசை பட்­டி­யலை வெளி­யிட்டு வரு­கிறது. கடந்த ஆண்டு, இந்த பட்­டி­ய­லில், இந்­தியா, 19 இடங்­கள் முன்­னேறி, 35வது இடத்தை பிடித்­துள்­ளது. இந்­தாண்டு, மேலும் முன்­னே­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)