பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
01:10
புதுடில்லி : ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததை அடுத்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கான, சரக்கு போக்கு வரத்து குறியீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும், ஒரு பொருளை ஒரே விலையில் விற்பனை செய்ய, ஜி.எஸ்.டி., வழிவகுக்கிறது. முன், ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்குள் சரக்கு லாரி நுழையும் போது, சோதனைச்சாவடியில் வரி ஆவணங்களை பரிசோதித்த பின்னரே, அதிகாரிகள் அனுமதிப்பர். இதனால், சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி.,யில், ஒரே வரி விகிதம் உள்ளதால், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் இன்றி, விரைவாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள முடிகிறது. இதனால், சரக்கு போக்குவரத்து செலவினம் வெகுவாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது போல, சரக்கு போக்குவரத்தில் உள்ள பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், குறியீடு வெளியிட திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள், ‘டெலாய்ட்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சரக்கு போக்குவரத்து குறியீடு வெளியிடப்படும். இது, சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
உலக வங்கி, 160 நாடுகளின் சரக்கு போக்குவரத்து செயல்பாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இந்த பட்டியலில், இந்தியா, 19 இடங்கள் முன்னேறி, 35வது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு, மேலும் முன்னேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|