மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ... ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ...
20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2017
15:54

புதுடில்லி : ஜியோ பீச்சர்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், டெலிகாம் மற்றும் மொபைல் போன் நிறுவனங்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4ஜி சேவைகளை அறிமுகம் செய்து டெலிகாம் சந்தையில் ஒட்டுமொத்த விலையை முற்றிலுமாக மாற்றியமைத்த ஜியோ தற்சமயம் மலிவு விலையில் பீச்சர் போன்களை வெளியிட இருக்கிறது.
மலிவு விலையிலான பீச்சர்போன் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சேவைகளும், சில ஜியோ செயலிகளை இயக்கும் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுவதால் பீச்சர்போன் விற்பனை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சார்ந்த ஜியோ இந்தியாவில் 20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அறிமுகமாகும் பீச்சர் போன்கள் இரண்டு ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 4ஜி வோல்ட்இ ஜியோ பீச்சர்போனின் விலை ரூ.1000-ரூ.1500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் முதற்கட்டமாக ஒரு கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஜியோ பீச்சர்போனில் 2.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 2 எம்பி பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. செல்ஃபி கேமரா 2000 எம்ஏஎச் பேட்டரி, எஃப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 4.1 உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. ஜியோ பீச்சர்போனில் டிஜ்ட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)