சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் ... பங்குச்சந்தைகள் புதிய உச்சம் : சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை தொட்டது பங்குச்சந்தைகள் புதிய உச்சம் : சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை தொட்டது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வந்தது ஜியோ போன்: சரிந்தது பிறநிறுவன பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2017
14:02

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ள ரூ.0 விலையிலான, அதாவது இலவச ஸ்மார்ட்போனால், இந்திய பங்குச்சந்தைகளில் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது காலாண்டு நிகரலாப விபரத்தை வெளியிட்டது. இதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.9108 கோடி நிகரலாபத்தை ஈட்டி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் நேற்று சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற்றன. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 2.03 சதவீதம் உயர்ந்து ரூ.1559.75 ஆக இருந்தது.

இந்நிலையில் காலை 11.15 மணியளவில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், ரூ.0 விலையிலான ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த கூட்டம் துவங்கிய போது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 2.2 சதவீதமும், ஐடியா செல்லுலர் நிறுவன பங்குகள் 2 சதவீதமும் சரிவடைந்திருந்தன.

அதே சமயம், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் 16 சதவீதமும், டெல்டா கார்ப் பங்குகள் 5.9 சதவீதமும், வெல்கார்ப் பங்குகள் 5.64 சதவீதமும் உயர்ந்திருந்தன. காலை 11.55 மணியளவில் ஜியோபோன் அறிமுகத்திற்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து, ரூ.1557.50 ஆக இருந்தது.

ஜியோபோன் அறிமுகம் மற்றும் அதன் சிறப்பம்ச வெளியீட்டிற்கு பிறகு பகல் 12.50 மணியளவில் ஐடியா செல்லுலார் பங்குகள் 5 சதவீதத்திற்கு மேலும், ஏர்டெல் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேலும் சரிந்தது. ஜியோ இலவசங்களால் தங்களின் காலாண்டு வருமானம் பாதிக்கப்படுவதாகவும், ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஜியோபோன் அறிமுகம், ஏர்டெல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)