பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
06:50
புதுடில்லி: செக்யூரிட்டி அண்டு இன்டெலிஜன்ஸ் சர்வீசஸ் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களுக்கு, பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் வர்த்தகம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், அதன் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், பழைய கடன்களை திரும்ப அளிக்கவும், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, 780 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்ததை தொடர்ந்து, புதிய பங்கு வெளியீடு, வரும், 31ல் துவங்குகிறது. முதலீட்டாளர்கள், ஆக., 2வரை இப்பங்குகளில் முதலீடு செய்யலாம்.
பங்கு ஒன்றின் விலை, 805 – 815 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கு வெளியீட்டிற்கு பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகள் மீதான வர்த்தகம் நடைபெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|