பதிவு செய்த நாள்
25 ஜூலை2017
10:13
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
கடந்த ஒரு மாதகாலமாகவே இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதோடு தினம் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. நேற்று நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய நிலையில் இன்று(ஜூலை 25-ம் தேதி) அந்த சாதனையை எட்டியது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.43 புள்ளிகள் உயர்ந்து 32,320.86 எனும் புதிய சாதனையையும், நிப்டி 44.90 புள்ளிகள் உயர்ந்து 10,011.30-ஆகவும் வர்த்தகமாகின.
முன்னணி நிறுவன பங்குகளின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் அது தொடர்பான பங்குகள் உயர்வுடன் இருப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 5.64 புள்ளிகள் உயர்ந்து 32,251.51-ஆகவும், நிப்டி 2.95 புள்ளிகள் உயர்ந்து 9,969.35-ஆகவும் வர்த்தமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|