பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
16:57
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று(ஜூலை 25) முதன்முறையாக நிப்டி 10 ஆயிரம் புள்ளகளை எட்டியபோதும், வர்த்தகம் முடியும் போது அது நிலைக்கவில்லை. ஆனால் இன்று(ஜூலை 26) 10 ஆயிரம் புள்ளிகளுடன் நிப்டி வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த பங்குச்சந்தைகள், நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.19 புள்ளிகள் உயர்ந்து 32,382.46-ஆகவும், நிப்டி 56.10 புள்ளிகள் உயர்ந்து 10,020.65-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.16 சதவீதம் உயர்ந்தன. ஐடிசி., ஐசிஐசிஐ., பங்குகள் 2 சதவீதம் ஏற்றம் கண்டன. இவைகள் தவிர எச்டிஎப்சி., ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மா, சிப்லா, டாடா ஸ்டீல், போன்ற பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|