நிறுவனங்களின் குழு செயல்பாடுகளுக்கு மைக்ரோசாப்ட் ‘கைசாலா ஆப்’ அறிமுகம்நிறுவனங்களின் குழு செயல்பாடுகளுக்கு மைக்ரோசாப்ட் ‘கைசாலா ஆப்’ அறிமுகம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் சரக்கு போக்குவரத்து துறை செலவினம் 20 சதவீதம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
00:48

புது­டில்லி : ‘‘ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லாக்­கத்­தால், சரக்கு போக்­கு­வ­ரத்து துறைக்கு அதிக பயன் கிட்­டும்; இத்­து­றை­யின் செல­வி­னம், 20 சத­வீ­தம் குறை­யும்,’’ என, மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சாலை துறை அமைச்­சர் நிதின் கட்­கரி தெரி­வித்து உள்­ளார்.

இது குறித்து, அவ­ரது அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி., அம­லுக்கு முன், சரக்கு போக்­கு­வ­ரத்து துறை, பல வகை ஆவ­ணங்­க­ளு­டன், பல்­வேறு வரி­களை செலுத்தி வந்­தது. வேறு மாநில எல்­லைக்­குள்நுழை­யும் போது, சோத­னைச் ­சா­வ­டி­யில் விற்­பனை வரியை, ‘டிபா­சிட்’ செய்ய வேண்­டி­யி­ருந்­தது. இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து தாம­த­மாகி, செல­வி­னம் உயர்ந்­தது; சுற்­றுச்­சூ­ழல் மாசு­பா­டும் அதி­க­ரித்­தது.

அமெ­ரிக்­கா­வில், ஒரு சரக்கு லாரி, ஓராண்­டில், 3 லட்­சம் கி.மீ., பய­ணிக்­கிறது; இது, இந்­தி­யா­வில், 50 ஆயி­ரத்­தில் இருந்து, 60 ஆயி­ரம் கி.மீ., என்ற அள­விற்கே உள்­ளது. இந்த இடர்ப்­பா­டு­க­ளுக்கு எல்­லாம் தீர்­வாக, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு முறை அம­லுக்கு வந்­துள்­ளது. நாடு முழு­வ­தும், ஒரே வரி விதிப்பு உள்­ள­தால், சோத­னைச்­சா­வ­டி­கள் மற்­றும் அதி­கா­ரி­களின் ஆய்­வின்றி, சரக்­கு­களை விரை­வாக கொண்டு செல்ல முடி­கிறது. இத­னால், நீண்ட துாரம் செல்­லும் சரக்கு லாரி­களின் பயண நேரம், ஐந்­தில் ஒரு பங்கு குறைந்து, சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வி­னம் குறைய வழி­வ­குத்­துள்­ளது.

நாடு முழு­வ­தும், பல்­வேறு இடங்­களில் சரக்கு போக்­கு­வ­ரத்து பூங்­காக்­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்றன. இவை, வெளி­மா­நில சரக்கை கொள்­மு­தல் செய்து, வினி­யோ­கிக்க உத­வு­கின்றன. இந்த மையங்­கள் இடையே, மிகப்­பெ­ரிய டிரக்­கு­கள், ரயில்­கள் மற்­றும் நீர்­வழி போக்­கு­வ­ரத்து மூலம், சரக்கு பரி­வர்த்­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படும். இத­னால், மாநி­லத்­திற்கு மாநி­லம் மாறு­படும் வரி­கள் கார­ண­மாக, ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் கிடங்கு அமைத்து, நிர்­வ­கித்து வந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, அவ்­வகை செல­வு­கள் மிச்­ச­மா­கும்.

சரக்கு பூங்­காக்­கள் மூலம், ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களும் உரு­வா­கும்; சுற்­றுச்­சூ­ழல் மாசு­பா­டும் குறை­யும். இது போன்ற சரக்கு பூங்­காக்­கள் அமைப்­பது உட்­பட, சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­யில், 2 லட்­சம் கோடி ரூபாய் வரை முத­லீடு செய்ய, பல நிறு­வ­னங்­கள் முன்­வந்­துள்ளன. பழைய வரி விதிப்­பில், பெரும்­பான்மை சரக்­கு­களுக்கு, 26.5 சத­வீத வரி வரம்பு இருந்த நிலை­யில், அது, ஜி.எஸ்.டி.,யில், 18 சத­வீ­த­மாக குறை­யும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.அத­னால், சரக்கு மதிப்­பின் அடிப்­ப­டை­யி­லான, போக்­கு­வ­ரத்து செல­வும் குறை­யும்.

பிற முன்­னணி நாடு­களில், சரக்கு மதிப்­பின் அடிப்­ப­டை­யி­லான போக்­கு­வ­ரத்து செல­வி­னம், 6 – 8 சத­வீ­த­மாக உள்­ளது; இது, இந்­தி­யா­வில், 14 சத­வீ­த­மாக உள்­ளது. தற்­போது, ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்த பின், நாடு முழு­வ­தும் தடை­யின்றி சரக்­கு­கள் விரை­வாக கொண்டு செல்­லப்­ப­டு­வ­தால், அவற்­றுக்­கான போக்­கு­வ­ரத்து செல­வி­னம், 10 – 12 சத­வீ­த­மாக குறை­யும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)