பதிவு செய்த நாள்
28 ஜூலை2017
09:57
மும்பை : கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (ஜூலை 28) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. பீ்காரில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக நேற்று நிப்டி சரிவுடன் நிறைவடைந்தது. இந்த நிலையே இன்றும் தொடர்கிறது.
அரசியல் மாற்றம், முக்கிய துறை பங்குகளின் சரிவு ஆகியவற்றின் காரணமாக ஆகஸ்ட் மாத வர்த்தகத்தை சரிவுடன் துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 134.80 புள்ளிகள் சரிந்து 32,248.50 புள்ளிகளாகவும், நிப்டி 33.45 புள்ளிகள் சரிந்து 9987.10 புள்ளிகளாகவும் உள்ளன.
சென்செக்ஸ் 32,000 புள்ளிகளுக்கு மேல் தக்க வைத்துக் கொண்ட போதிலும், நிப்டி மீண்டும் 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, லுபின், பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ, ஓஎன்ஜிசி, ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4 முதல் 5 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|