பதிவு செய்த நாள்
01 ஆக2017
06:54
புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: சேமிப்பு கணக்கிற்கான வட்டி,4 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதன்படி, 1 கோடி ரூபாய் வரை உள்ள, சேமிப்பு கணக்கு இருப்பிற்கு, 3.5 சதவீத வட்டி வழங்கப்படும். மேலும், 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட இருப்பிற்கு, வழக்கம் போல், 4 சதவீத வட்டி அளிக்கப்படும். பணவீக்க விகிதத்தில் ஏற்பட்டு உள்ள சரிவு மற்றும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடன் அளிப்பிற்கும், ‘டிபாசிட்’ திரட்டுவதற்கும் உள்ள செலவினத்தை சமாளிக்கும் நோக்கில், சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும், சேமிப்பு கணக்கிற்கு, 4 சதவீத வட்டி வழங்க வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ., அதில், 0.5 சதவீதத்தை குறைத்துள்ளது, சிறு சேமிப்பாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|