பதிவு செய்த நாள்
04 ஆக2017
02:33
புதுடில்லி : ‘ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம், வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்ததை அடுத்து, வங்கிகள், வீட்டுவசதி கடனுக்கான வட்டியை குறைக்கும்பட்சத்தில், குடியிருப்புகள் விற்பனை அதிகரிக்கும்’ என, கட்டுமான நிறுவன தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ராஜிவ் தல்வார், தலைமை செயல் அதிகாரி, டி.எல்.எப்.: நாட்டின் பொருளாதார சூழல் மாறி வருகிறது. திட்டங்களுக்கு, விரைவில் அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில் துவங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெற, ரியல் எஸ்டேட் போன்ற உருவாக்கத் துறைகளில், கடன் புழக்கம் பெருக வேண்டியது மிகவும் அவசியம். அதனால், ரிசர்வ் வங்கி, வரும் மாதங்களில் மீண்டும், ‘ரெப்போ’ வட்டியை குறைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
ஜாக்சே ஷா, தலைவர், கிரெடாய்: ரிசர்வ் வங்கி, வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. இந்த பயனை, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். வீட்டுவசதி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்குமாறு, மாநில அரசுகள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
பிரவீன் ஜெயின், தலைவர், நாரெட்கோ: ரியல் எஸ்டேட் துறை, பல ஆண்டு களாக மந்தமாக உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், குடியிருப்பு விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள், வீட்டுவசதி கடனுக்கான வட்டியை குறைத்தால், வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும்.
அன்ஷுமன் மேகசின், தலைவர், சி.பி.ஆர்.இ.: அமலுக்கு வந்துள்ள, புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால், குடியிருப்பு விற்பனை சூடுபிடிக்கும். வட்டி குறைப்பால், மக்களின் வீட்டுக்கடன் சுமை குறையும். வீட்டுவசதி துறையில், கடன் பெறுவது அதிகரிக்கும்.
அனுஜ் பூரி, தலைவர், அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ஸ்: கட்டி முடித்து விற்கப்படாத குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. வீடு வாங்குவதை தீர்மானிப்பதில், வட்டி விகிதத்தை விட, விலை தான் முக்கிய அம்சமாக உள்ளது. தற்போதைய சூழலில், வீடு விலை மேலும் குறைய வாய்ப்பில்லை.
ஆர்.கே.அரோரா, தலைவர், சூப்பர்டெக்: பண்டிகை காலம் துவங்குவதற்கு முன், வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதால், இதுவரை ரியல் எஸ்டேட் துறையில் நீடித்து வந்த மந்தநிலை முடிவிற்கு வரும்.
தீபக் கபூர், இயக்குனர், குல்ஷன் ஹோம்ஸ்: வட்டி குறைப்பால், வீட்டுவசதி கடனுக்கான மாதாந்திர தவணை குறையும். இதன் காரணமாக, குடியிருப்புகளின் தேவை அதிகரிக்கும்.
வீட்டுவசதி கடன் வட்டி:
வங்கி ரூ.30 லட்சம் வரை ரூ.30 –75 லட்சம் ரூ.75 லட்சத்திற்கு மேல் எஸ்.பி.ஐ., •8.35 8.50 8.65 8.40 8.55 8.70எச்.டி.எப்.சி., •8.35 – 8.85 8.50 – 9 8.55 – 9.05 8.40 – 8.90 8.50 – 9 8.55 – 9.05ஐ.சி.ஐ.சி.ஐ., •8.35 – 8.80 8.65 8.70 8.40 – 8.85 8.70 8.75• பெண்களுக்கு / (வட்டி விகிதம், ஆக., 3 நிலவரப்படி)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|