பதிவு செய்த நாள்
12 ஆக2017
00:44
பெங்களூரு:பியூச்சர் குழுமத்தைச் சேர்ந்த, பிக் பஜார் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தள்ளுபடி சலுகைகளுடன் கூடிய, ஐந்து நாள் மெகா சேமிப்பு விற்பனையை, இன்று துவக்குகிறது.
இது குறித்து, பிக் பஜார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சதாஷிவ் நாயக் கூறியதாவது:கடந்த, 2006 முதல், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிக் பஜார் கடைகளில், ‘5 நாள் மெகா சேமிப்பு’ விற்பனை நடக்கிறது.
இந்தாண்டு விற்பனை, இன்று துவங்கி, 16 வரை நடைபெறும். காலை, 9:00 மணி முதல்,அனைத்து பிக் பஜார் கடைகளும் திறந்திருக்கும். அவற்றில், தள்ளுபடி சலுகைகளுடன் பொருட்களை, வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
மின்னணு கருவிகள், சமையலறை சாதனங்கள், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களை, தள்ளுபடி விலையில் பெறலாம்.வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேமிப்பை வழங்க வேண்டும் என்பதே, நிறுவனத்தின் நோக்கம். இந்த ஐந்து நாட்களில், அந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|