பதிவு செய்த நாள்
12 ஆக2017
00:47
புதுடில்லி:‘இந்திய, ஐ.டி., நிறுவனங்களுக்கு, அதிகளவில் வர்த்தக வாய்ப்பை வழங்கும் நாடாக, சுவீடன் உருவெடுத்து வருகிறது’ என, தேசிய சாப்ட்வேர் மற்றும் சேவைகள் அமைப்பான, ‘நாஸ்காம்’ தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சியை விட, சுவீடன், நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட, ‘நார்டிக்’ நாடுகளின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.இந்நாடுகள், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு அதிகம் செலவிடுகின்றன. இங்கு, புதிய கண்டுபிடிப்புகளின் விகிதாசாரமும் அதிகமாக உள்ளது.
இதனால், உலகளவில், மிகச் சிறந்த வர்த்தகச் சூழல் உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திலும், புதிய கண்டுபிடிப்புகளில் இரண்டாவதுஇடத்திலும், தொடர்ந்து நீடித்து வருகின்றன.
‘நார்டிக்’ நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுவீடன், 55 ஆயிரம் கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது. ‘ஸ்கைப், கேன்டி கிரஷ், ட்ருகாலர், ஸ்போடிபை’ போன்ற பிரசித்தி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக, சுவீடன் விளங்குகிறது.
கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ‘நார்டிக்’ நாடுகளின்மொத்த, ஐ.டி., செலவினத்தில், சுவீடனின் பங்கு, 40 சதவீதம், அதாவது, 2,300 கோடி டாலராக இருந்தது. இந்நாடுகளில், தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவை பெருகி வருவதால், வெளியாரிடம் பணிகளை ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் போக்கு மேலும் அதிகரிக்கும்.
இது, இந்திய, ஐ.டி., மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு, மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கும். அவை, சுவீடனை இலக்காக கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|