பதிவு செய்த நாள்
13 ஆக2017
08:18
புதுடில்லி : எம்.சி.எக்ஸ்., எனப்படும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் நிறுவனம், செப்டம்பரில், ‘கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட்’ வர்த்தகத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.‘இந்தியாவில், முதன்முறையாக, இத்தகைய வர்த்தக நடைமுறை அறிமுகமாக உள்ளது’ என, எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், முர்கங்க் பரஞ்சபி தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:எம்.சி.எக்ஸ்., முன்பேர சந்தையில், தங்கம் மீது, ‘ஆப்ஷன்’ பிரிவின் கீழ், முதன்முதலாக, வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. புதிய வர்த்தகத்திற்கான சோதனை முன்னோட்டம், ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.இந்த வர்த்தக வாய்ப்பை, சந்தையாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர். இந்த புதிய வசதி, சிறிய நகை கடைகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மூலம், அவர்கள், அன்றாடம் தங்கம் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தை பற்றி கவலையின்றி, வர்த்தகம் புரிவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|