பதிவு செய்த நாள்
13 ஆக2017
08:19
புதுடில்லி : ‘சர்வதேச சந்தையில், ஆடை, தோல், காலணி ஆகிய துறைகளில், சீனாவின் பங்கு குறைந்து வருவதால், இத்துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க, இந்தியாவுக்கு இது தான் சரியான வாய்ப்பு’ என, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பொருளா தார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன் விபரம்:சீனாவில் உற்பத்தி மற்றும் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அத்துடன், தொழிலாளர் ஊதியமும் உயர்ந்துள்ளது.இதனால், சீனாவின் ஆடை, தோல், காலணி ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இத்துறைகளின் ஏற்றுமதியை, இந்தியா அதிகரிக்க வேண்டும். இதற்காக, வரி விகிதம், தொழிலாளர் சட்டம், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளுக்கு, விரைந்து தீர்வு காண வேண்டும்.ஆடைகளை போல, அதிக மான தொழிலாளர்களை கொண்ட, தோல் மற்றும் காலணிகள் ஏற்றுமதியிலும், சீனா பின்தங்கி உள்ளது.வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகள், சீனாவின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முயல்கின்றன. இந்நாடுகள், வரி விலக்கு வசதியுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன.இந்த போட்டியை சமாளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, பருத்தியை விட, நைலான் துணிகளுக்கு விதித்துள்ள அதிக வரி, கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவு போன்ற சவால்களுக்கு தீர்வு காண வேண்டும்.தோல் மற்றும் தோல் சாராத காலணிகள் ஏற்றுமதியில், இதர நாடுகளை விட, இந்தியாவில் வரி அதிகமாக உள்ளது. எனினும், தோல் துறைக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு சலுகை திட்டங்கள், இத்துறையின் வளர்ச்சிக்கு துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|