பதிவு செய்த நாள்
20 ஆக2017
03:18
புதுடில்லி : மத்திய வர்த்தக அமைச்சகம்,உள்நாட்டு சரக்கு பெட்டக முனையங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.இது குறித்து, வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சரக்கு பெட்டக முனையம் அமைப்பதற்கு அனுமதி பெற, பல்வேறு ஆவணங்களை வழங்குவதிலும், அவற்றின் பரிவர்த்தனைகளிலும் பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திப்பதாக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.இதையடுத்து, உள்நாட்டில், சரக்கு பெட்டக முனையங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் வசதியை, அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.இதன் மூலம், நிறுவனங்களுக்கு கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும்; விண்ணப்பிக்கும் நடைமுறையில், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். கப்பல், நிதி, விமான போக்குவரத்து, வர்த்தகம், ரயில்வே ஆகிய அமைச்சகங்கள், அவற்றுக்கு உரிய விண்ணப்பங்களை பரிசீலித்து, விரைவாக ஒப்புதல் வழங்கும்.விண்ணப்பதாரர்கள், எஸ்.எம்.எஸ்., மற்றும் ‘இ – மெயில்’ வாயிலாக, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|