பதிவு செய்த நாள்
20 ஆக2017
03:18
மும்பை, ஆக. 20–அனில் அம்பானியின், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.இது, இந்தியாவில், சொத்து நிர்வாக சேவையில் ஈடுபட்டுள்ள,முன்னணி நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடாக இருக்கும்.இதற்கான அனுமதி கோரி, இந்நிறுவனம், உரிய ஆவணங்களுடன், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துஉள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு, 18 ஆயிரம் கோடி ரூபாய் என, அது நிர்வகிக்கும் சொத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கணக்கீட்டின்படி, இந்நிறுவனம், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், 1,800 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என, வங்கி வட்டாரங்கள்தெரிவித்து உள்ளன.ஜப்பானின் நிப்பான் லைப் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை உருவாக்கி உள்ளன.அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம், 2008ல், பங்கு வெளியீட்டில் களமிறங்கியது; அதன்பின், அவரது நிறுவனம் ஒன்று, மீண்டும் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|