பங்கு வெளியீட்டில் ரிலையன்ஸ் நிப்பான் லைப்பங்கு வெளியீட்டில் ரிலையன்ஸ் நிப்பான் லைப் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2017
03:19

புதுடில்லி : மருந்து நிறு­வ­னங்­களின் நியா­ய­மற்ற சந்­தைப்­ப­டுத்­தும் முறைக்கு கடி­வா­ளம் போட்டு, மருந்து விலையை குறைக்க, தனி கண்­கா­ணிப்பு அமைப்பை ஏற்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.மருந்து தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­களும், அவற்றை சந்­தைப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­களும், தங்­கள் மருந்­து­களை பரிந்­து­ரைக்­கும் மருத்­து­வர்­க­ளுக்கு, பல்­வேறு சலு­கை­களை வழங்­கு­கின்றன.மருத்­து­வக் கல்வி மாநாடு என்ற பெய­ரில், மருத்­து­வர்­கள், குடும்­பத்­து­டன் இல­வ­ச­மாக வெளி­நா­டு­களை சுற்­றிப் பார்க்க ஏற்­பாடு செய்­கின்றன. மேலும், உள்­நாட்டு சுற்­றுலா, வாக­னம் மற்­றும் விலை உயர்ந்த பரிசு பொருட்­களும், மருத்­து­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்றன.இதற்கு பிர­தி­யு­ப­கா­ர­மாக, மருத்­து­வர்­கள், அந்­நி­று­வ­னங்­களின் மருந்­து­க­ளையே, அவை, அதிக விலை கொண்­டவை என தெரிந்­தி­ருந்­தும், நோயா­ளி­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.நிறு­வ­னங்­கள், முறை­யற்ற வழி­களில், மருந்­து­களை சந்­தைப்­ப­டுத்­து­வ­தால் ஏற்­படும் செல­வி­னத்தை, மருந்­து­கள்விலை­யில் சுமத்­து­கின்றன. இத­னால், சாதா­ரண மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.இது போன்ற முறை­யற்ற செயல்­பா­டு­க­ளுக்கு முடிவு கட்ட, மருந்து விற்­பனை, சந்­தைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்­ட­வற்றை கண்­கா­ணிக்க, தனி அமைப்பை ஏற்­ப­டுத்த, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.இது தொடர்­பாக, புதிய மருந்து கொள்கை வரை­வ­றிக்கை தயா­ரிக்­கப்­பட்டு, அனைத்து தரப்­பி­ன­ரின் கருத்­துக்கேட்­புக்­காக வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:சாதா­ரண மக்­களும் வாங்­கும் விலை­யில், அத்­தி­யா­வ­சிய மருந்­து­கள் கிடைக்க வேண்­டும். அதே சம­யம், மருந்து துறை­யும் நீடித்த, நிலை­யான வளர்ச்சி காண வேண்­டும்.ஆனால், மருந்து விற்­ப­னை­யில், லாப வரம்பு, நியா­ய­மற்ற வகை­யில் உள்­ளது. நிறு­வ­னங்­கள், ஸ்டாக்­கிஸ்­டு­கள், வினி­யோ­கஸ்­தர்­கள், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள் உள்­ளிட்­டோர், பல்­வேறு சலு­கை­களை வழங்­கு­கின்­ற­னர்.மருந்து விலை, அப­ரி­மி­த­மான லாப வரம்­பில் நிர்­ண­யிக்­கப்­ப­டு­வது தான், இதற்கு கார­ணம். இத­னால், சாதா­ரண மக்­கள் மட்­டு­மின்றி, மருந்து துறை­யும் பாதிக்­கப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக,மருந்து விற்­ப­னை­யில், லாப வரம்பை ஒரே சீராக நிர்­ண­யிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த வரம்பு, அனைத்து தரப்­பி­ன­ரு­டன் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். இதன் மூலம், மருந்து வர்த்­த­கம் சீரா­கும் என்­ப­து­டன், மருந்து விலை­யும் குறை­யும்.இத்­து­டன், மருந்­து­களை சந்­தைப்­ப­டுத்­தும் நெறி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்டு, அவற்றை கடை­பி­டிப்­பது கட்­டா­ய­மாக்­கப்­படும். மருந்து துறைக்கு என, ஒழுங்­கு­முறை கண்­கா­ணிப்பு அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­படும். இந்த அமைப்பு, நெறி­மு­றை­களை மீறு­வோர் மீது நட­வ­டிக்கை எடுத்து, அப­ரா­தம் விதிக்­கும்.முதற்­கட்­ட­மாக, தேசிய அத்­தி­யா­வ­சிய மருந்­து­கள் பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்ள அனைத்து மருந்­து­க­ளுக்­கும், அவற்­றின் தன்மை மற்­றும் அளவை கருத்­தில் கொள்­ளா­மல்,விலை நிர்­ண­யிக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)