பதிவு செய்த நாள்
23 ஆக2017
00:34
புதுடில்லி : எச்.சி.எல்., இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின், ஐ – போன் உட்பட, அதன் அனைத்து தயாரிப்புகளையும், இந்தியாவில் வினியோகிக்க உள்ளது.
இது குறித்து, எச்.சி.எல்., இன்போசிஸ்டம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளை வினியோகிப்பது தொடர்பாக, ஜூலையில் விவாதிக்கப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில், இந்த வினியோகத்திற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, ஐ – போன் உட்பட, ஆப்பிளின் அனைத்து தயாரிப்புகளும், உள்நாட்டில், எங்கள் நிறுவனத்தின் மூலம் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எச்.சி.எல்., இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்துடன், ஆப்பிள் கூட்டு வைத்துள்ளதன் மூலம், அதன் தயாரிப்புகள், நாடு முழுவதும் சென்றடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, ஆப்பிள் தயாரிப்புகளை, இந்தியாவில் வினியோகம் செய்ய, இன்கிராம் மைக்ரோ, ரெடிங்டன், ராஷி பெரிபெரல்ஸ், பீடெல் டெலிடெக் ஆகிய நிறுவனங்களுடன், ஆப்பிள் கூட்டு வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|