பதிவு செய்த நாள்
13 செப்2017
01:15
புதுடில்லி : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வலைதளத்தில், உணவுப் பொருட்களின் தரம் குறித்து, அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனை, மாதிரிகளின் ஆய்வு தகவல்கள் ஆகியவற்றை, நேரடியாக, சம்பந்தப்பட்ட துறைகளுடன் பரிமாறிக் கொள்ளும் வசதி அறிமுகமாகி உள்ளது.
உணவகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புகாரின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த நடைமுறை, அதிகாரிகளின் மிரட்டல், பொய் குற்றச்சாட்டு, லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பு தெரிவிக்கிறது. இதையொட்டி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், ‘FoSCoRIS’ என்ற புதிய நடைமுறையை, அதன் வலைதளத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஆணையம், அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: உணவு பாதுகாப்பு தொடர்பாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு, இந்த புதிய திட்டம் துணை புரியும். இதில், ஆய்வு நடவடிக்கைகளை, உடனடியாக அறியும் வசதி உள்ளதால், அதிகாரிகளின் பாரபட்சமான செயல்பாடு முடிவிற்கு வரும். அத்துடன், அதிகாரிகளின் பொறுப்பையும் உறுதி செய்ய முடியும். அரசு விதிகளின்படி, உணவு பொருட்களின் தரம், துாய்மை ஆகியவற்றை ஆய்வு செய்யும் இத்திட்டத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, இணைய வசதி உள்ள கையடக்க சாதனம் வழங்கப்படும். ஏற்கனவே, பல மாநிலங்களில், இந்த சாதனம், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு வழங்காத மாநிலங்களுக்கு, சாதனங்களை வாடகைக்கு எடுத்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|